தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மகிழங் கோட்டை ஓம் படை அய்யனார் திருக்கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற ஐந்தாம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் தனபூஜை மற்றும் முதற்கால ியாக தொடங்கியது அதனை தொடர்ந்து ஆறாம் தேதி இரண்டாம் கால பூஜை மூன்றாம் காலம் பூஜையும் நடைபெற்றது இன்று ஏழாம் தேதி நான்காம் கால பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது பின்னர்

புனித கலசத்திற்கு வேத மந்திரம் ஓதப்பட்டு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது ஆலயத்தில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் மகிழங் கோட்டை கிராமவாசிகள் செய்தனர்
