நடிகர் தனுஷ் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களுக்கு நேரில் சென்று இன்று (செப்.17) சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை கண்ட பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவருடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அந்த

சமயத்தில், தன்னை சந்திக்க வந்து தன் காலில் விழ முயன்ற மூதாட்டி ஒருவரின் கையை

பிடித்து தடுத்த தனுஷ், மாறாக அவரே அந்த மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கி நலம் விசாரித்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் பெரிதும் நெகிழ வைத்தது.
