மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை அவரது வீட்டில் இன்று (செப்.17) திமுக எம்பி கனிமொழி சந்தித்து பேசியுள்ளார். தொகுதி மறுவரையறை, பிராந்திய கட்சிகளின் உரிமைகள் குறித்த ஆலோசனைகளுக்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக திமுக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும், 2029 மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிய 3-வது அணியை உருவாக்குவதற்கான நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
