பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 10 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், அதிக சூடான டீ அல்லது காபியை குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பானங்களை அதிக சூட்டில் தொடர்ந்து பருகும்போது, வாயிலிருந்து வயிற்றுக்கு செல்லும் உணவுக்குழாயின் உட்பகுதி செல்கள் பாதிக்கப்பட்டு அலர்ஜி மற்றும் காயங்கள் ஏற்படுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே, ஆறவைத்து குடிப்பதே உடலுக்கு பாதுகாப்பானது என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
