கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி சுரங்கப்பாதை கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என்று அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 20-ம் தேதியே அங்கு குவிக்கப்பட்டிருந்த மண்ணை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தும், ஒப்பந்ததாரர் அதை செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டியுள்ளார். நிர்வாகத்தின் இந்த விதிமீறலே தற்போதைய பெரும் விபத்துக்கு முதன்மை காரணம் என முதல்வர்வி.டி.சதீசன் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
