Skip to content
Home » சிபிஎம் மறியல் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 1589 பேர் கைது….

சிபிஎம் மறியல் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 1589 பேர் கைது….

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1589 பேர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வுக்குக் காரணமான பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், வேலையின்றி வாடும் இளைஞர்களக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை நாடு தழுவிய அளவில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் 5,000-த்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் 1589 பேரை போலீசார் கைது செய்தனார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற மறியல்  போராட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் தலைமை வகித்தனார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், சு.மதியழகன், எஸ்.ஜனார்த்தனன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆர்.சோலையப்பன், டி.லட்சாதிபதி, ஆர்.வி.ராமையா, ஆர்.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.முகமதலிஜின்னா, அ.மணவாளன், கி.ஜெயபாலன், டி.சலோமி, எம்.பாலசுந்தரமூர்த்தி, சி.மாரிக்கண்ணு, டி.காயத்ரி, சிஐடியு மாநில செயலாளர் ஏ.தேவமணி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர்,  மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சந்தோஷ்குமார் மற்றும் 93 பெண்கள் உட்பட 234 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!