Skip to content
Home » மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

  • by Senthil

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  இலங்கையில் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று சென்னை கொண்டு வந்தனர்.  பின்னர் இன்று சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக இளையராஜாவின் மகள் பவதாரனியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.  அவரது உடலுக்கு திரைத்துறையினர் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பவதாரணியின் உடலை காண தந்தை இளையராஜா தற்போது வருகை புரிந்தார். மகள் பவதாரிணிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!