Skip to content
Home » பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர்  கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து  வருகிறார்கள்.  இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள், இந்த  பகுதியில்  உள்ள மக்கள் உயிரிழந்தால் அருகில் உள்ள தனியார் தோட்டம் வழியாக  இறந்தவரின் உடலை தூக்கி கொண்டு

ஆற்றை கடந்து சுடுகாடு  செல்லும் நிலை  தற்போது வரை உள்ளது, மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை கயிறு மூலமாக கட்டி உடலை மறுகரைக்கு கொண்டு சென்று சுடுகாட்டில் புதைக்கின்றனர், பல வருடகளாக துறைசார்ந்த அதிகாரிகளிடம் ஆற்றை கடக்க சிறு பாலம் அமைத்து தர மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை,   எனவே தமிழக அரசு உடனடியாக சிறுபாலம் அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!