தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக அருணாச்சலம் என்பவரைப் பிடித்து விசாரணை போலீசார் அடித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் தன்னை தலையில் தாக்கியதாக அருணாச்சலம் வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் அருணாச்சலம் வாக்குமூலத்தின் மூலம் தூத்துக்குடி தென்பாகம் போலீசாரின் கொடூர தாக்குதல் அம்பலமானது.
