Skip to content
Home » தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

தீபாவளி பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் மணல், தண்ணீர், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பட்டாசு கடைகளின் உள்ளே சென்று ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில்… மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் 6 பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில், விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட ஒரு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், மாவட்டத்தில் செயல்படும் சிலரை பட்டாசு கடைகள் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!