விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நியாயமான விலையை கிடைக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற தாக்குதலில் சுப்கரன் சிங் என்ற 24 வயதுடைய இளம் விவசாயி உயிரிழந்தார். அவருடைய அஸ்தி நாட்டில் பல்வேறு புண்ணிய நதிகள் மற்றும் கடல்களில் கரைத்து அஞ்சலி செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் அஸ்தி இன்று திருச்சி வந்தது அஸ்தியை தேசிய தென்னிந்திய நதிகள்
இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி படித்துறையில் கரைத்தனர்
முன்னதாக இந்த அஸ்தியானது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் மாம்பழச்சாலை வழியாக அம்மா மண்டப பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது தொடர்ந்து அவரது அஸ்தி காவிரியில் கரைக்கப்பட்டது