கரூர் மாவட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் முழுமையாக வழங்குவதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் தளபதி தலைமையில் ஆட்சி அமைய கரூரில் இருக்கின்ற நான்கு தொகுதியில் உள்ள வேட்பாளர்களையும் வெற்றியடைய செய்ய அயராது பாடுபடுவோம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அயராது பாடுபடுவோம் என உறுதியளித்துள்ளனர்.
மேலும் கரூர் மாவட்டத்தின் திமுக தேர்தல் பொறுப்பாளர் அசோக் கூறியதைப்போல் “நாமதான் ஜெயிக்கின்றோம். நாமமட்டும்தான் ஜெயிக்கின்றோம்” என்ற கர்ஜனையோடு களத்தில் வெற்றிவாகை சூட இரவுபகல் பாராது அயராது பாடுபடுவோம். என தெரிவித்துள்ளனர்.
