அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-
ஜெயங்கொண்டம் அருகே பள்ளிவிடை பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளந்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு போராட்டம்
நடத்தப்படும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டம் நியாயமான போராட்டத்தில் விவசாயிகள் மீது நடத்திய கண்ணீர் புகை வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற மாட்டார். இந்த முறை மோடி வெற்றி பெறுவது சாத்தியம் அல்ல மக்கள் அவர் மீது வெறுப்பில் உள்ளனர்.
திமுகவுடன் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முறை புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்