கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை இணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை விரிவடைய செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி
சரவணன், மாநகரச் செயலாளர் எஸ்.பி. கனகராஜ், மண்டல தலைவர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள்மற்றும் பிரதிநிதிகள் என ஏராளமானோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.