Skip to content

திமுக இளைஞரணி மாநாடு ஜன 21ம்தேதி நடைபெறுகிறது..

தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ‘மிக்ஜம்’ புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்தது. இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 24-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. இந்த நிலையில் அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால் 2வது முறையாக இளைஞரணி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!