Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சபரிமலை செல்ல வேண்டாம்;பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நிரபத்தரி பூஜைக்காக சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு அபாயம் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, யாத்திரையை முடிந்தவரை ஒத்திவைக்குமாறு திருவிதாங்கூர் தேவசம் வாரியம் (TDB) கேட்டுக்கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 16-21 (சிங்கம் மாத நடை திறப்பு) அல்லது ஆகஸ்ட் 24-28 (ஒணம் சிறப்பு பூஜைகள்) காலத்தில் தரிசனம் செய்ய திட்டமிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் நீடித்து வருகிறது.

error: Content is protected !!