Skip to content
Home » க.பரமத்தி அருகே குடிநீர் வரவில்லை….காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

க.பரமத்தி அருகே குடிநீர் வரவில்லை….காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

  • by Senthil

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி, மேட்டு தெரு, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இங்கு சரிவர குடிநீர் வராததால் பலமுறை பஞ்சாயத்து தலைவரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று கரூர் டு கோவை மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தல் பிரிவு பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த க.பரமத்தி வட்டார ஆய்வாளர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!