2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ஒட்டுமொத்த அமைச்சர் குழுவினரையும் வெளியேற்றி, தவெக மற்றும் அஇஅதிமுகவிற்கு தமிழக மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் தங்கர்பச்சான் தனது எக்ஸ் தளத்தில் தனது எக்ஸ் தளத்தில், “மக்களின் உரிமையை விலை கொடுத்து மட்டுமே வாக்குகளை வாங்கி விடலாம் எனும் நம்பிக்கையில் மண் விழுந்திருக்கிறதாக இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஆட்சி மாற்றம் நிகழப் போவதை பதிவிட்டிருந்தேன். அதனை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்கள் என்னை வசை பாடினார்கள். பரம்பரை அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது. பானையில் இருந்த மொத்தத்தையும் வழித்து எடுத்துச் சென்று விட்டார்கள். வெறும் பானையை வைத்துக்கொண்டு இனி சோறு போட வேண்டும்! மக்களின் உரிமையை விலை கொடுத்து மட்டுமே வாக்குகளை வாங்கி விடலாம் எனும் நம்பிக்கையில் மண் விழுந்திருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
