மியான்மர் நாட்டில் இன்று (பிப்.5) அதிகாலை ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 115 கி.மீ. ஆழத்தில், 24.91 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 95.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட ரிக்டர் 7.7 மற்றும் 6.4 அளவிலான நிலநடுக்கங்களில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

