அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவெறும்பூர் அசூர் சாலையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் இன்று காலை உணவு வழங்கினார். மற்றும் முதியோருக்க தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் N.கார்த்திக் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் SS. ராவணன், SKD.கார்த்தி, மாவட்ட வர்த்தக அணி
செயளாலர் S.ராஜாமனிகண்டன், மற்றும் ஒன்றிய அவைத்தலைவர் குண்டூர் செல்வராஜ், நவல்பட்டு பாலமூர்த்தி, சேட்டு, கதிரவன், சுப்ரமணி, மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் தோழர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்