உயர்கல்விக்கான கடன் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் மாணவர்களுக்கு ரூ.3,000 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் சுலபமாகக் கடன் பெற வழிகாட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பேராசிரியரைத் தமிழக அரசு நியமிக்க உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கடன் வரம்பு ₹4.5 லட்சத்தில் இருந்து ₹7.5 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடப்பாண்டில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு கடனாக ₹3,000 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
