தஞ்சை கரந்தை பூக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(65). 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி விளையாடுவதற்காக வந்துபோது அந்த சிறுமியை கணேசன் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார். நடந்த விபரத்தை அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சந்திரா வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தார்.

