Skip to content

11ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி

  • by Authour

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல், தேர்தல் ஆணையும் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

error: Content is protected !!