Skip to content

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

மலேசியாவிலிருந்து நேற்று   திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது .அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்( 44 ) என்பவர் பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து
இமிகேரசன் அதிகாரிகள்  முத்துகிருஷ்ணனை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!