திருத்துறைபூண்டி அருகே குடும்பத் தகராறில் எலி மருந்தை சாப்பிட்டு தன்னுடைய whatsapp உள்ளிட்ட வலைதள பக்கத்தில் கண்ணீர் அஞ்சலி ஸ்டேட்டஸ் வைத்த கணவர். அதை பார்த்து மனமுடைந்த மனைவி காயத்ரி (24) தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட துயரம். மேட்டுப்பாளையம் பகுதியில் மயக்கத்தில் இருந்த பீரவீன் (31) தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த தம்பதிக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
