திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று துறையூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மாற்றுத்திறனாளிக்கு முனைவர் பட்டம் படிப்பதற்காக, முதல்வரின் சார்பில் ரூ.1 லட்சம் உதவி தொகை மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. அதேபோன்று, அசோக் என்பவருக்கு நவீன மடக்கு ஊன்று கோலையும் மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் வழங்கினார். இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.
