திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், வழங்கப்பட்டு வந்த விமான சேவை வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக ஒன்றரை மாதமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போர் பதற்றம் குறைந்தநிலையில், திருச்சியில் இருந்து மஸ்கட்டுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நேரடி விமானசேவை மீண்டும், வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
