Skip to content
Home » வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது

வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது

  • by Senthil

நெல்லை,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்   பலத்த மழை பெய்ததால்,  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம்  காயல்பட்டினத்தில்  வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்த மழை நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து  தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

கால்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ. மழை பெய்துள்ளது.  அதாவது அங்கு ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து உள்ளது. இது போல தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் குறிப்பாக  சாத்தான்யகுளம்,  கோவில்பட்டடி, குலசேகரன்பட்டினம், பகுதிகளில் 55 செ.மீ. அதிகமான மழை பதிவாகி உள்ளது. இது தான் வெள்ளத்திற்கு காரணம்.

தூத்துக்குடியில் வெள்ளம் வடிய சில நாட்கள் ஆகும். அது தாழ்வான பகுதி என்பதாலும் அருகில் கடல் உள்ளதாலும்  வெள்ளம் வடிய தாமதம் ஆகலாம்.  அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு முகாம் கள் அமைக்கப்பட்டுள்ளன.  வெள்ளத்தில் இருந்து வெளியே வர முடியாத மக்களுக்கு உணவுப்பொட்டலம்  போட   ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு உள்ளது.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில்  இருந்து விமானப்படை  ஹெலிகாப்டர் வந்து உணவுப்பொட்டலம்  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!