குடகனாறு வல்லுநர் குழு அறிக்கை வெளியிட வேண்டும், குடகனாற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், குடகனாறு அணையிலிருந்து பிரதான வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும், நங்ஞாச்சி ஆறு அணையின் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டம் ஈசநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 10க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், திண்டுக்கல் மாவட்ட குடகனாறு விவசாயிகள் சங்க தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரக்கூடிய குடகனாறு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க கோரி விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள், கோரிக்கைகள் வைக்கப்பட்டும் இதுவரை அரசு எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக 09-09 2020 – ல் குடகனாறு பிரச்சனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது 3 மாதங்களில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இன்று வரை அந்த அறிக்கை வெளியிடாமல் மூன்று வருடங்களாக அரசு காலதாமதம் செய்து வருகிறது.
எனவே, குடகனாறு வல்லுநர் குழு அறிக்கை வெளியிட வேண்டும், குடகனாற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், குடகனாறு அணையிலிருந்து பிரதான வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும், நங்ஞாச்சி ஆறு அணையின் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியாகவும், மக்கள் உங்களை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் மேற்கொள்ளும் நிலை உருவாகும். இந்த பிரச்சனை தொடர்பாக இதுவரை விவசாயிகள் சங்கங்கள் மூலமாக 6 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரையும் சந்திக்க அனுமதி கேட்டும் அமைச்சர்கள் விவசாயிகளை சந்திக்காமல் புறக்கணிப்பதோடு குடகனாறு விவசாயிகளை ஏளனமாக அமைச்சர் பேசுவது வன்மையாக கண்டிக்கிறது. இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் வாழ்வாதார பிரச்சனையாக உள்ள இந்த குடகனாறு பிரச்சனையை அரசு உடனடியாக தடுக்கப்பட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டும் நிலை உருவாகும் என்றார்.