Skip to content

தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வக்குமார் ஆகியோர் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

இதில் வல்லம் பேரூர் நகர செயலாளர் டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் மாணிக்கம், அப்துல் முகமது யூசுப் ஒன்றிய பிரதிநிதி மனோகர், துணைச் செயலாளர் அழகர்சாமி, கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!