கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணமில்லா பேருந்து திட்டம் காரணமாக தனியார் பேருந்துகள் பாதிக்கப்படும் என்றும் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டு, வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
