Skip to content
Home » வீட்டு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் மாற்றி விற்பனை…

வீட்டு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் மாற்றி விற்பனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது விளந்த கிராமம் புது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் விநியோகத் திட்டம் அரசின் மானிய விலை வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் பெரிய சிலிண்டர்களுக்கு சமையல் எரிவாயுவை நிரப்பி அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் திருமண மண்டபங்களில் விழாக்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரிடமிருந்து வீட்டு உபயோகச் சிலிண்டர்கள் நான்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் மூன்று என மொத்தம் ஏழு சிலிண்டர்கள் மற்றும் கேஸ் மாற்ற பயன்படும் இணைப்பு சாதனம் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றி முருகனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து முருகனை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!