Skip to content
Home » பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி வரவேற்பு விழா திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அதனைத்

தொடர்ந்து வழக்கறிஞர் பெண்களுக்கான சட்ட உதவி மையத்தில் நிர்மலா ராணி காவேரி மகளிர் கல்லூரியின் முதல்வர் சுஜாதா சிறப்புரையற்றினார்கள் முக்கிய உரையாக தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி சபையின் இயக்குனர் டாக்டர் காளிராஜ் மற்றும் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி சபையின் உறுப்பினர் ராணி உரையாற்றினார். இந்நிகழ்ச்சி மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு பெண்களுக்கான வளர்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்தில் இயக்குநர் சீதாலெட்சுமி உரையாற்றினார். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!