டில்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ஆம் தேதி சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் நடைபெற்ற விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
