Skip to content

அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சிவா ( 57) அரசு அதிகாரி (பெயர் மாற்றம்). இவர்
சில நாட்களுக்கு முன்பு அவரது செப்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் டில்லியில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுகிறேன். இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஒரு முக்கிய புள்ளியிடமிருந்து 147 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது அதில் உங்களின் ஏடிஎம் கார்டும் இருக்கிறது. ஆகவே உங்களுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப் போகிறோம். அரெஸ்ட் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்புங்கள். விசாரணைக்குப் பின்னர் அந்த பணம் விடுவிக்கப்படும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிவா அதிர்ச்சியில் உறைந்தார்.
அவருக்கு மூன்று மகள்கள். ஒரு மகள் டாக்டராக உள்ளார். 2வது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மகளின் திருமணத்துக்காக மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும், வேறு வகைகளிலும் ரூ. 90 லட்சத்தை தனது வங்கியில் வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டினால் மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமே என கருதி பதட்டத்தில், அவர் அந்த மோசடி பேர்வழியின் மிரட்டலுக்கு பயந்து தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.90 லட்சம் பணத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்ததை எண்ணி வருந்தினார். அதன் பின்னர் தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க சென்றபோது, கந்தசாமி வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்ததை பார்த்து என்னவென்று கேட்டபோது நடந்த சம்பவங்களை அழுது புலம்பியுள்ளார்.
அதன் பின்னரே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி பேர்வழிகள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
.இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதற்காக தான் ஆர்பிஐ பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை விளம்பரங்களை வெளிப்படுத்தி வருகிறது .இருந்த போதிலும் பொதுமக்கள் ஏமாந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!