சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவரை சக மாணவ் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12-ஆம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு மாணவரை மற்றொரு மாணவர் கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
