தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை 6.15 மணிக்கு செல்கிறார். இரவில் அங்கு ஓய்வு எடுக்கிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி அருகே முத்தநாடு மந்து பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்களை கவர்னர் சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை)சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
18-ந் தேதி காலை 11.30 மணியளவில் ஊட்டி ராஜ்பவனில் இருந்து கவர்னர் புறப்பட்டு கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
கடந்த ஆண்டு ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டி தமிழ்நாடு அரசின் கல்வி திட்டத்திற்கு எதிரான புதிய கல்வி கொள்ளை பற்றி பேசி தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய கவர்னர் ரவி, இப்போது மீண்டும் ஊட்டி செல்கி்றார். நீலகிரி தொகுதி்யில் பாஜக போட்டியிடப்போகிறது என பேசப்படும் நிலையில் கவர்னர் ரவியின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.