Skip to content
Home » பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது 3200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பஸ்கள் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் 1000 பஸ்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 100 பஸ்கள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

புதிதாக வரும் பஸ்களும், புனரமைக்கப்பட்ட 1000 பஸ்களும், மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். புனரமைக்கப்பட்ட முதல் 100 பஸ்களின் இயக்கத்தை வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இன்னும் சில மாதங்களில் தமிழகம் எங்கும் அரசு பஸ்கள் மஞ்சள் வண்ணத்தில்  ஜொலிக்க இருக்கிறது.  புதிதாக வர உள்ள பஸ்கள் 50 சீட்டுகளுடன் இருக்கும். இந்த பஸ்கள் இயக்கப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்து நெருக்கடி தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!