Skip to content
Home » இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி… மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்..

இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி… மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்..

  • by Senthil

புதுக்கோட்டை  முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கு காலையிலும், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மதியமும் மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு  காலாண்டித் தேர்வில் 10,12 – ம் வகுப்புகளுக்கு  தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்து பேசும்போது கூறியதாவது, அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியின் வாயிலாக இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு  தலைமை யாசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும். மேலும் அரசுப்பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் புதுக்கோட்டை வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அன்றாடம் பள்ளியில்  இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யக்கூடிய பணிகளை மறக்காமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கூடுதல் தேவைப்படும் விலையில்லா பேருந்து பயண அட்டை சார்ந்த தகவல்களை உடனடியாக போக்குவரத்துக்கிளைக்கு அளித்திட வேண்டும். 6- ம் வகுப்பு முதல் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி சார்ந்த விபரங்களை மீண்டும் சரிபார்த்து சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய் யவேண்டும். 6- ம் வகுப்பு முதல் 9- ம் வகுப்பு வரை எழுதும் மற்றும் வாசிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்தி தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத்திறனை உரிய காலத்திற்குள் 100 சதவீதம் அடைய பாடுபட வேண்டும்.

பள்ளி நலனில் அக்கறையுள்ள  முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரை  ஒருங்கிணைத்து பள்ளியின் வளர்ச்சிக்கு  திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் 10,12 – ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வில் 80 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பாடவாரியாக  பகுப்பாய்வு செய்து 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆலோசனைகள் வழங்கினார். இந்த மீளாய்வுக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரமேஷ், அறந்தாங்கி ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில்,  பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, இளையராஜா  மற்றும்  அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!