கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தமிழக மக்கள் மெல்ல மீண்டு வரும் சூழலில், இன்று (ஜூன் 19) தமிழகத்தின் 18 மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடித் தகவல் வெளியிட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
18 மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வௌியாகியுள்ளது. தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர்
திருச்சி, நீலகிரி , கோவை , கரூர், திண்டுக்கல் , தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
