Skip to content
Home » வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் மாடிவீட்டில் வசித்து வருகிறார். தனது வயலில் எள் அறுவடை செய்யவும் ஆடு, மாடுகளை மேச்சலுக்கும் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி, அம்மா உள்ளிட்ட அனைவரும் வீட்டின் கதவுகளை உள்புறமாக பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் தாழ்ப்பாளை மர்ம நபர்கள் உடைத்து, வீட்டின் உள்ளே புகுந்து மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை மற்றும் 250 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசு மற்றும் அறஞ்சான் கயிறு போன்ற பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். தேவேந்திரன் குவாகம் காவல் நிலையத்திற்கு சென்று திருடு போன பவுன் மற்றும் வெள்ளி பொருட்களை கண்டுபிடித்து தருமாறு காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தார். போலீசார் தனிபடை அமைத்து திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!