இந்தோனேசியாவின் ஜாவா தீவில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் மீது இரண்டு லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
