Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குண்டாக இருந்த மனைவி… விஷம் கொடுத்து கொன்ற கணவன்..

கடப்பா மாவட்டத்தில் மனைவி குண்டாக இருந்ததால் விஷம் கொடுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

a

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பிராட்டூர் மண்டலம், ஈஸ்வர் ரெட்டி நகரில்  பத்ரிபள்ளி கிரண் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்ரிபள்ளி பத்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 7 வயது மகளுடன் முத்தனூரில் தனது தாய்மாமன் வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் மனைவி குண்டாக இருப்பதோடு அதிகமாக சாப்பிட்டு வந்ததால் எப்படியாவது தனது மனைவியைக் கொல்ல விரும்பிய பத்ரிபள்ளி கிரண், இணையத்தில் தேடி ரூ.80,000 மதிப்புள்ள விஷப் பொருளைக் வாங்கினார். கடந்த மாதம் 26 ஆம் தேதி, பிராட்டூர் மண்டலம், ஈஸ்வர் ரெட்டி நகரில் உள்ள கிரணின் பெற்றோர் வீட்டிற்கு மனைவியை அழைத்து சென்றார். 

29ஆம் தேதி இரவு  மனைவிக்கு உணவில் விஷம்  கொடுத்ததார். அவர் கீழே விழுந்ததும் தலையணையைப் முகத்தில் அழுத்தி மூச்சுத்திணறடித்துக் கொன்றார். பின்னர்
தனக்கு எதுவும் தெரியாதது போன்று தனது மனைவி பத்மா குடும்பத்தினருக்கு போன் செய்து திடிரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து இறந்துவிட்டதாக  கூறினார். இதனால் முத்தனூர் நகரில் வசித்து வந்த பத்மாவின் தந்தை பெங்களூரு ராஜகுல்லைய்யா வீட்டிற்கு வந்து பார்த்ததில் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில்  புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விபு கிருஷ்ணா, இன்ஸ்பெக்டர் கொண்டரெட்டி, எஸ்.ஐ. மதுசூதன் ரெட்டி மற்றும் சீனிவாசலு ஆகியோர் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டது மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில்  கொலை என உறுதி செய்து சந்தேகத்தின்படி கணவரை விசாரித்தபோது மனைவி குண்டாகவும் அதிகமாக சாப்பிட்டு வந்ததால் கொலை செய்ததாக கூறினார். இதனையடுத்து கிரணை  கைது செய்து நீதிமன்றய்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!