அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக தலைமைக்கழக உறுப்பினர் பதவி மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதிவுகளை ராஜினாமா செய்யவுள்ளேன் என முன்னாள் எம்பி சத்யபாமா பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். எதற்கும் தயாராக இருக்கிறேன். அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து
ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 2,000 பேர் ராஜினாமா செய்துள்ளனர். மக்களுக்காக நினைத்த திட்டங்களை செய்ய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். எனது ராஜினாமா கடிதத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்க உள்ளேன்” என்றார்.