ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது, ஜனநாயகம் செத்து பணநாயகம் வெல்வதாக ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் சீமான் கூறியுள்ளார். தேர்தலில் முதலீடு செய்பவர்கள், பல மடங்கு லாபத்தை எடுக்கத்தான் நினைப்பார்கள் என்ற அவர், எத்தனை காலத்திற்கு திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்கள் என கேட்டார். மேலும், மக்கள் செய்த தவறால் 15 ஆண்டுகளாக கத்திக் கொண்டிருப்பதாகவும், மீண்டும் அந்த தவறை செய்யாதீர் என்றும் பேசினார்.
