டிராகன்’ படம் மூலம் தமிழில் புகழ்பெற்ற நடிகை கயாடு லோஹர், படப்பிடிப்பில் தனக்கு உடன்பாடில்லாத ஆடைகள் அல்லது காட்சிகளை மறுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நடிகரின் தனிப்பட்ட எல்லைகளையும் படக்குழுவினர் மதிக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர், திறந்த மனதுடன் பேசுவதே பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ‘இம்மார்டல்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் அவர் பிசியாக நடித்து வருகிறார்.
