Skip to content
Home » ஐஎப்எஸ் ரிசல்ட்… இந்தியா முழுவதும் 147 பேர் தேர்ச்சி

ஐஎப்எஸ் ரிசல்ட்… இந்தியா முழுவதும் 147 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

2022-ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய ஐஎப்எஸ் பணி தேர்வுகளின் இறுதி முடிவுகள்  இன்று வெளியிடப்பட்டன.  இந்தியா முழுவதும் 147 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  இவர்கள் இந்தியா முழுவதும் மாவட்ட வன அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.  இதில் முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் தேர்ச்சிபெறவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!