தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
சென்னை, திருவண்னாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை
அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை முடக்கி விடவேண்டும் என்ற திட்டத்தில் மத்திய பாஜக அரசால் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று வருமான வரித்துறை சோதனை என அனைத்துக்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதுடன், தோல்வி பயத்தில் பாஜக இனி வரும் காலங்களில் இதை விட அதிகமான சோதனைகளிலும் ஈடுபடும் என்றும் கூறினர்.