மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. களத்தில் சரியாக வியூகத்துடன் செல்ல வேண்டும் என்றும், இடைத்தேர்தல் செலவுகள் அதிகம் என்றும், வியூகமும் பணமும் இல்லாமல் போட்டியிட்டு சொற்ப வாக்குகளைப் பெற்றால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் சீனியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
