ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகா என்ற இடத்தில் இன்று மதியம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடலில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் அது 7.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அடுத்த நிலநடுக்கமும் ஏற்பட்டது. எனவே ஜப்பான் நாடு சுனாமி எச்சரிக்கை விடுத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியது. சிறிது நேரத்தில் சுனாமி அலை தாக்கியது. வஷிமா, இஷிகா ஆகிய நகரங்களில் முதலில் 1மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. விரைவில் 5 மீ உயரதை்திற்கு அலைகள் எழும்பும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடினர்.